ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள தேசத்தில் பிறந்தாலும் ஊர்மிளா காயத்ரி அறிமுகமானது தெலுங்கு படத்தில். சிக்ஸ் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அடுத்து ஷரவணா என்ற கன்னடப் படத்தில் நடித்தார், மூன்றாவது படம் பெங்காலி படம். அடுத்து அவர் கன்னடத்திலேயே நிலை கொண்டு விட்டார்.
தமிழில் மியாவ் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதனால் அவருக்கும் அடுத்த வாய்ப்புகள் அமையவில்லை. ஆனாலும் தமிழில் எப்படியாவது ஜெயித்து விடவேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். லேட்டஸ்டாக போட்டோ ஷூட் நடத்தி அதனை இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், மீடியாக்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். "தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக பிற மொழியில் கவனம் செலுத்துவதை குறைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது கதைகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எதையும் முடிவு செய்யவில்லை" என்கிறார் ஊர்மிளா. கேரளாவில் பிறந்தாலும் ஊர்மிளாவின் பூர்வீகம் திருநெல்வேலி என்பது கூடுதல் தகவல்.