ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரெஜினாவுக்கும், சமந்தாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே தமிழ் நாட்டில் பிறந்தவர்கள். தமிழ் படங்களில் அறிமுகமாகி இங்கு புறக்கணிக்கப்பட்டு அதன் பிறகு தெலுங்கிற்கு சென்று வெற்றி பெற்றவர்கள். சமந்தா மீண்டும் தமிழுக்கு வந்து வெற்றி பெற்றார். அவர் வழியில் மீண்டும் தமிழுக்கு வந்து வெற்றிக்கு போராடிக் கொண்டிருக்கிறார் ரெஜினா. சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்துள்ள மாநகரம் படம் மூலம் கவனம் பெற்றுள்ளார். நெஞ்சம் மறப்பதில்லை, சிலுக்குவார்பட்டி சிங்கம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், ராஜதந்திரம் 2 என 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
"தமிழ் நாட்டில் பிறந்து விட்டு தமிழில் ஜெயிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்து. இதற்காக பல முயற்சிகள் செய்தேன். இடையிடையே சில தமிழ் படங்களில் நடிக்கவும் செய்தேன். ஆனால் மாநரகம் நல்ல ஒரு திருப்பத்தை கொடுத்துள்ளது. சரவணன் இருக்க பயமேன் அடுத்து வெளியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலினுடன் நடித்தது பெருமையாக உள்ளது. எளிமையான நடிகர், அதிகம் பேச மாட்டார். ஆனால் அவர் எது சொன்னாலும் பாசிட்டிவாகத்தான் இருக்கும்.
தமிழ் படங்களில் நான் எப்போதோ ஜெயித்திருக்க வேண்டும். ஆனால் கடவுள் அதற்கான நாளை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார், இப்போது அதற்கான வாய்ப்புகளை தேடித் தருகிறான். தமிழில் விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன்" என்கிறார் ரெஜினா.