ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராஜமவுலி இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள படம் பாகுபலி-2. திரையிட்ட அனைத்து திரையரங்கங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடி வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது இப்படம். அதனால் ஆரம்பத்தில் சில சின்னச் சின்ன தவறுகள் அந்த படத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டி விமர்சித்தவர்கள் கூட இப்போது அமைதியாகி விட்டனர்.
இந்த நேரத்தில் கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித்தும், பாகுபலி-2 படத்தில் சமுதாய கருத்தும் எதுவும் இல்லையே என்று கருத்து சொன்னதாக ஒரு தகவல் இணையதளங்களில் வைரலாக பரவியது. அதையடுத்து, அவருக்கு எதிர்ப்பான குரல்களும் இணையதளங்களில் ஓங்கி ஒலித்து வருகின்றன. இந்த சேதி பா.ரஞ்சித்தின் கவனத்துக்கு சென்றதை அடுத்து, பாகுபலி-2 படம் பார்த்தேன். நன்றாக இருந்தது. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. மற்றபடி இந்த படம் குறித்து வேறு கருத்தினை நான் எங்கும் பதிவு செய்யவில்லை என்று தனது சார்பில் ஒரு தகவலை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரஞ்சித்.