ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய எச்.வினோத் அடுத்து இயக்கி வரும் படம் தீரன் அத்யாயம் ஒன்று. கார்த்தி, ரகுல் ப்ரீத்தி சிங், அபிமன்யூ சிங், போஸ் வெங்கட் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கார்த்தியின் கேரக்டர் பெயர் தீரன். துப்பறிவதில் கில்லாடியான போலீஸ் டி.எஸ்.பி தீரன் கைக்கு ஒரு முக்கியமான கேஸ் வருகிறது. அதன் பின்னால் செல்லும் தீரன், இந்தியா முழுக்க பயணிக்க வேண்டியது இருக்கிறது. ஒரு சம்பவத்தின் பின்னால் எத்தனை மனிதர்கள், எத்தனை இடங்கள், தொடர்பு இருக்கிறது என்பதை ஆச்சர்யத்துடனும், திடுக்கிடும் சம்பவங்களுடனும் விளக்கப்போகிறது படம். பெரும்பகுதி கதை வட இந்தியாவில் நடக்கிறது. கொழுத்தும் வடநாட்டு வெயிலில் தொடர்ந்து 42 நாட்கள் படப்பிடிப்பை நடத்திவிட்டு திரும்பியிருக்கிறார்கள். காற்று வெளியிடை படத்துக்காக குளிர் நடுங்கிய கார்த்தி, தீரன் அதிகாரம் ஒன்றுக்காக வெயிலில் காய்ந்திருக்கிறார்.