விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கமல் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்து இருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் தனியார் டிவிக்கு பேட்டி அளித்தார். அதில், மகாபாரதத்தில் பெண்ணை வைத்து சூதாடுவதை புத்தகமாக படித்துக் கொண்டிருக்கும் ஊரு இது..., என்றார். இது இந்துக்களை அவமதிக்கும் செயல். கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வள்ளியூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கமல், மே 5 ல் நேரில் ஆஜராக வேண்டும், வள்ளியூர் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இதை எதிர்த்தும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கமளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்தியா பன்முகத்தன்மை கொண்ட மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கில் கருத்து தெரிவிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்திற்குட்பட்டே கருத்தை வெளிப்படுத்தினேன் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கமல் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தும், இந்த வழக்கு குறித்து விசாரிக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டார்.