மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஆர்.முத்து சரவணன், கே.ஆர்.பிலிம்ஸ் கார்த்தி இணைந்து தயாரித்துள்ள படம் கிரகணம். கிருஷ்ணா-கயல் சந்திரன் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் மட்டுமின்றி, நடிகர்கள் ஆரி, அபி சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழா தொடங்கியதுமே வரவேற்புரை ஆற்றிய தயாரிப்பாளர் முத்து சரவணன், நடிகர்கள் படங்களின் பிரமோஷனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தயாரிப்பாளரின் வலியை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணாவை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக பேசினார்.
ஆனால் அதையடுத்து பேசிய கிருஷ்ணா, மீடியாக்களுக்கும், எப்எம்மிற்கும் பேட்டி கொடுக்க என்னை அழைத்தனர். ஆனால் என் தந்தைக்கு உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால், நான் டிரைலர் விழாவுக்கு வந்து மீடியாக்களிடம் பேசிக்கொள்கிறேன் என்று சொன்னேன். அப்படி நான் சொன னதை வைத்துதான் இப்படி பேசுகிறார் தயாரிப்பாளர் என்று தன்னைத்தான் அவர் அப்படி சொன்னார் என்பதை வெளிப்படையாக சொன்னார் கிருஷ்ணா.
இந்த மேடையில் தான், டில்லியில் போராடி இறந்து போன இரண்டு விவசாயிகளின் குடும்பத்தினரை அந்த மேடைக்கு வரவைத்து பண உதவி செய்தனர் படக்குழுவினர். அதோடு, விவசாயிகளின் நிலையைப்பற்றி, விவசாயம் காக்கப்பட வேண்டும் என்பது பற்றி நடிகர்கள் ஆரி, அபி சரவணன் ஆகிய இருவரும் பேசினர்.