ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பார்வதி நடிப்பில் கடந்த வருடம் தமிழில் பெங்களூர் நாட்கள் மற்றும் இந்த வருடம் மலையாளத்தில் 'டேக் ஆப்' என இரண்டு படங்களே ரிலீஸ் ஆகியிருக்கின்றன. தற்போது பிருத்விராஜின் 'மை ஸ்டோரி' படம் மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார் பார்வதி. இதுதவிர பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இவ்வளவு குறைவான படங்களில் நடிக்க காரணம், வாய்ப்பு கிடைக்காததால் அல்ல வாய்ப்பை தேடி பார்வதி நகராதது தான் காரணம். ஆனால் அதன் விளைவு என்ன ஆகிற்று தெரியுமா..? இப்போது மலையாள சினிமாவின் அதிக சம்பளம் பெறுபவராக மாறியிருக்கிறார் பார்வதி.
ஆம் பார்வதி தங்கள் படத்தில் நடித்தால் போதும் என நினைக்கும் தயாரிப்பாளர்கள், அவருக்காக ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் தர தயாராக இருக்கிறார்களாம். குறிப்பாக கடந்த மாதம் வெளியான 'டேக் ஆப்' படத்தின் வெற்றியும் வசூலும் அந்தப்படத்தை தனது நடிப்பால் தாங்கிப்பிடித்திருந்த பார்வதியின் மார்க்கெட் வேல்யூவையும் கூட்டியிருக்கிறது. தவிர இந்திக்கும் வேறு போகப்போகிறார் என்பதால் இங்குள்ள தயாரிப்பாளர்களே அதிக சம்பளம் தர தயாராக இருக்கிறார்களாம். ஆனாலும் என்ன.. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள முயற்சிக்காதவராச்சே பார்வதி..? இல்லை என்றால் வருடத்திற்கு மூன்று, நான்கு படங்களிலாவது நடித்திருக்க மாட்டாரா என்ன..?