ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கரண் ஜோகர் இயக்கத்தில் 2012-ம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ஸ்டூடண்ட் ஆப் தி இயர். இப்படத்தின் மூலம் தான் வருண் தவான், சித்தார்த் மல்கோத்ரா, ஆலியா பட் ஆகியோர் சினிமாவில் அறிமுகமாகினர். தற்போது இவர்கள் பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இதில், டைகர் ஷெரப் ஹீரோவாக நடிக்க, புனித் மல்கோத்ரா இயக்க, கரண் ஜோகர் தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வந்தது. ஆனால், ஸ்டூடண்ட் ஆப் தி இயர்-2 இப்போதைக்கு உருவாக வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் டைகர்.
இதுகுறித்து டைகர் ஷெரப் கூறியிருப்பதாவது... "தற்போது நான் முன்னா மைக்கேல் படத்தில் நடித்துள்ளேன். இதன் புரொமோஷன் வேலைகள் முடிந்ததும், அடுத்தப்படியாக பாகி-2 படத்தில் நடிக்கிறேன். ஜூன் அல்லது ஜூலையில் இப்படம் ஆரம்பமாக இருக்கிறது. பாகி-2 படத்திற்காக சீனா சென்று பயிற்சி எடுக்க உள்ளேன் என்று கூறியவர், ஸ்டூடண்ட் ஆப் தி இயர்-2 படம் பற்றி பேசுகையில், தற்போதைக்கு அந்தப்படம் உருவாகவில்லை, தள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.