ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஹர ஹர மகாதேவகி பாடல் ஹிட்டக்குப்பிறகு 11 படங்களில் பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார் பாடலாசிரியர் சொற்கோ. அதில், சத்ரு படத்தில் காவல்துறையினரின் பெருமைகளை, தியாகங்களை சொல்லும் வகையில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.
அதுகுறித்து சொற்கோ கூறுகையில், ஹர ஹர மகாதேவகி பாடல் ஹிட்டுக்குப் பிறகு நான் கவனிக்கப்படும் பாடலாசிரியராகி விட்டேன். மாறுபட்ட சூழலுக்கு பாடல் எழுத என்னை அழைக்கிறார்கள். அந்த வகையில், கர்ஜனையில் திரிஷாவுக்காக காதல் பாடல் எழுதியுள்ள நான், பொட்டு, திருப்பதிசாமி குடும்பம் படங்களைத் தொடர்ந்து சத்ரு படத்தில் காவல்துறையினரின் தியாகங்களை சொல்லும் சூழலுக்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறேன்.
அச்சம் நீக்கி காக்கும் கண்கள் -என தொடங்கும் அந்த பாடலை எழுதியது பெருமையாக உள்ளது. காவலர்களின் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை சொல்லும் அந்த பாடலில் அவர்களின் பெருமைகள் மட்டுமின்றி, தியாகங்கள், அர்ப்பணிப்பை சொல்லியிருக்கிறேன். இந்த பாடல் வெளியாகும்போது காவ லர்களை குறை சொல்பவர்கள்கூட அவர்களின் தியாக வாழ்க்கையை நினைத் துப் பார்க்கும்போது கண் கலங்குவார்கள். அந்த அளவுக்கு இந்த பாடலின் சரணங்களில் அவர்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை உருக்கமாக சொல்லியிருக்கிறேன். இந்த மாதிரி வாழ்வியலை சொல்லும் பாடல்களை எழுதுவது மனதுக்கு நிறைவாக உள்ளது. அதேசமயம் இது என்னை பெருமைப்படுத்தும் பாடலாகவும் இருக்கும் என்கிறார் சொற்கோ.