ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழகத்தில் பாகுபலி-2 படத்திற்கு கடைசிநேரத்தில் ஏற்பட்ட சிக்கலை, இயக்குநர் ராஜமெளலி, ரூ.2 கோடியை விட்டு கொடுத்து தீர்த்து வைத்துள்ளார். பாகுபலி என்ற படத்தின் மூலம் உலக சினிமாவை இந்திய சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ராஜமெளலி. இப்போது அதன் இரண்டாம் பாகத்தை இன்னும் பிரமாண்டமாய் இயக்கி, இன்று உலகம் முழுக்க ரிலீஸ் செய்துவிட்டார். படத்திற்கு நல்ல பாசிட்டீவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால், தமிழகத்தில் பாகுபலி-2 இன்று காலை வெளியாகவில்லை. பாகுபலி 2 படத்தின் தமிழக உரிமை ரூ 47 கோடிக்கு வாங்கப்பட்டது. ஆனால் விநியோகஸ்தர்கள், பைனான்சியர்களின் மோசமான வர்த்தகம் காரணமாக இந்தப் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. ஒருவழியாக பேச்சுவார்த்தை முடிந்து, ரூ 2 கோடி பாக்கியில் வந்து நின்றது.
ரூ.2 கோடிக்காக படம் நிற்க வேண்டாம் என்று வருந்திய ராஜமெளலி, அந்த ரூ.2 கோடிக்கு தான் பொறுப்பேற்பதாக கூறி விட்டு கொடுத்தார். இதனால் பாகுபலி-2க்கு தமிழகத்தில் நீடித்த பிரச்னை தீர்ந்தது. இன்றைக்கு பாகுபலி-2 தமிழில் வெளியாகிறது என்றால் அதற்கு முக்கிய காரணமே ராஜமெளலி விட்டு கொடுத்த ரூ.2 கோடி தான் கோலிவுட்டில் பேசப்படுகிறது.