விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
இந்திய திரையுலகிற்கு இன்று(ஏப்.,27, வியாழன்) சோகமான நாள் என்று தான் சொல்ல வேண்டும். காலையில் தான் பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா மறைந்த நிலையில், இரவு 7 மணியளவில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான வினுசக்கரவர்த்தி (வயது 72) காலமானார்.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் வினுசக்கரவர்த்தி. இந்நிலையில் இன்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார்.
போலீஸ் அதிகாரி
1945 டிச, 15ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர் வினுசக்கரவர்த்தி. ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லே பள்ளியில் பள்ளிப்படிப்பும், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம்., படித்தார். படிப்பை முடித்ததும் காவல்துறை பணியில் சேர்ந்தார். பின் தெற்கு ரயில்வேயில் 4 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
தமிழில் முதல் அறிமுகம்
கல்லூரி நாட்களிலேயே நாடகம் எழுதி நடித்துள்ளார். முதன் முதலில் கன்னட இயக்குநர் ஒருவரிடம் கதையாசிரியராக பணியாற்றினார். இதில் பரசக்கே கண்ட தின்மா என்ற படம் வெற்றி பெற்றது. இதை தமிழில் ரோசாப்பூ ரவிக்கைகாரி என்ற பெயரில் ரீமேக் செய்தனர். சிவக்குமார் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் இவர் தமிழில் அறிமுகமானார்.
1000 படங்கள்
தொடர்ந்து தமிழில், கரிமேட்டு கருவாயன், குரு சிஷ்யன், நாட்டாமை, அருணாச்சலம், மாப்பிள்ளை கவுண்டர், சிவப்பு நிலா, நினைத்தேன் வந்தாய், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத் தேடி, அமர்க்களம், பாண்டவர் பூமி, தென்காசி பட்டனம், ஜெமினி, சுந்தரா டிராவல்ஸ், கிரி, முனி, தேசிங்கு ராஜா, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வினுசக்கரவர்த்தி, அதிகபட்சம் காமெடி, குணச்சித்திரம் மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், படகா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதில் தமிழில் மட்டும் 900 படங்களும், மலையாளத்தில் 30 படங்களும், தெலுங்கில் 5 படங்களும், ஒரே ஒரு திரைப்படம் படகா மொழியிலும் இன்னும் பிற மொழிகளிலும் நடித்துள்ளார். சில படங்களை இயக்கியுள்ளார்.
2007ல் வெளியான முனி திரைப்படம் இவரது 1000-வது படமாக அமைந்தது.
முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்
சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், அர்ஜூன், ராமராஜன், பிரபு, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சில்க் ஸ்மிதா அறிமுகம்
1979ல் இவர் கதை எழுதி வெளியான வண்டி சக்கரம் என்ற படத்தில் கவர்ச்சி நடிகை என அழைக்கப்பட்ட மறைந்த சில்க் சிமிதா வை வண்டி சக்கரம் என்ற திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த படத்தில் சாராயக்கடையில் சிலுக்கு என்ற கேரக்டரில் ஸ்மிதா நடித்திருப்பார். இதன்பின் சில்க் ஸ்மிதா என்ற அடைமொழியால் அறியப்பட்டார்.
விருதுகள்
மாநில அரசின் கலைமாமணி விருது, மலேசியா, சிங்கப்பூர், கனடா தமிழ் சங்கம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, காஞ்சி சங்கர மடத்தின் ஆஸ்தான வித்வான் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
ரஜினிக்கு பிடித்தவர்
ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வினு சக்ரவர்த்தி பேசும் போது, நான் ரஜினிக்கு லக்கியான நடிகர் என அறியப்படுகிறேன். ரஜினியும் இதனை ஒத்துக்கொள்வார். நான் அவருடன் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளன என்றார். ரஜினியுடன் தம்பிக்கு எந்த ஊரு, குரு சிஷ்யன், மனிதன், சிவா, ராஜாதி ராஜா, அண்ணாமலை, அருணாச்சலம் என 25 ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
மறைந்த வினு சக்கரவர்த்திக்கு கர்ணப்பூ என்ற மனைவியும், சரவணன் என்ற மகனும், சண்முகப்பிரியா என்ற மகளும், உள்ளனர். வினுசக்கரவர்த்தியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை(ஏப்.,28, வௌ்ளியன்று) இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது.