ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வடிவேலு நடித்த வின்னர் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் வைத்திருப்பார். அதைத்தான் சிவகார்த்திகேயன் நடித்த படத்திற்கு டைட்டீலாக வைத்தனர். அதேபோல் தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய்சேகர் என்ற கேரக்டர் பெயரில் தற்போது ஒரு படம் தயாராகிறது. இந்த படத்தை ஜூலியும் 4 பேரும் படத்தை இயக்கிய ஆர்.வி.சதீஷ் இயக்க, அதே படத்தில் நாயகனாக நடித்த அமுதவாணன் நடிக்கிறார்.
இந்த படத்திற்கும், வடிவேலுவின் நாய் சேகர் கேரக்டருக்குமிடையே ஏதாவது தொடர்பு உள்ளதா? என்று அமுதவாணனிடம் கேட்டபோது, நாய் சேகர் என்ற இந்த பெயர் ரசிகர்களிடம் நன்றாக ரீச்சாகியுள்ளது என்பதற்காகத்தான் வைத்தோம். என்றாலும், இந்த கதைக்கும், நாய் சேகர் டைட்டீலுக்கும்கூட ஒரு தொடர்பு உள்ளது. அதாவது. கதைப்படி இந்த படத்தில் நான் குப்பை பொறுக்கும் பையனாக சேகர் என்ற கேரக்டரில் நடிக்கிறேன். மேலும், அவன் பெயருடன் நாய் என்பது எப்படி சேர்ந்தது என்பதற்கு சிலகாரணங்கள் உள்ளது. அது படம் பார்க்கும்போது தெரியும். இந்த நாய் சேகர் படப்பிடிப்பு மே மாதம் தொடங்குகிறது என்கிறார்.