ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
சென்னை : அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், அச்சமில்லை அச்சமில்லை, நினைத்தாலே இனிக்கும் உள்பட 70 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பி.எஸ்.லோகநாத் (73). இவருக்கு இன்று காலை 6 மணி அளவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடல் கே.கே.நகர் 5வது செக்டாரில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு டைரக்டர் கே.பாலசந்தர் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 4.30 மணி அளவில் தி.நகரில் உள்ள கண்ணம்மாபேட்டை மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது. இவர் அபூர்வ ராகங்கள் படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது பெற்றவர். இவருக்கு மனைவி ராதா, 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். இளைய மகன் சஞ்சய் தற்போது திரைப்பட ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.