ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ், தாரை தப்பட்டை படத்தின் மூலம் வில்லாக அறிமுகமாகி சேதுபதி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்தார். தற்போது தனிமுகம், பில்லா பாண்டி படங்ளில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
ஆர்.கே.சுரேஷ் அடுத்து நடிக்கும் படம் வேட்டை நாய். இதனை அப்புக்குட்டி ஹீரோவாக நடித்த மன்னாரு படத்தின் இயக்குனர் எஸ்.ஜெய்சங்கர் இயக்குகிறார். கடுகு படத்தின் மூலம் பிரபலமாகியிருக்கும் சுபிக்ஷா, ஆர்.கே.சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமய்யா, சரவண சக்தி, ரமா ஆகியோர் நடிக்கிறார்கள். தாய் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் பற்றி இயக்குனர் எஸ்.ஜெய்சங்கர் கூறியதாவது:
படத்தின் நாயகன் முரடன் என்றால் அப்படி ஒரு முரடன் என்கிற அளவுக்குக் கடினமான மூர்க்கனாக இருப்பவன். ஆனால் அடிப்படையில் நல்லவன். இவ்வளவு நல்லவனா என்று அவனுக்குத் தெரியாது அப்படிப் பட்டவனை உலகையே அறியாத குழந்தைத்தனம் கொண்ட பெண் அவனை யார் என்று உணர வைக்கிறாள். இப்படிப்பட்ட இரு துருவ குணச்சித்திரங்களும் எப்படி இணைய முடியும்.? அவர்கள் என்னென்ன பிரச்னைகளை எதிர் கொண்டார்கள் என்பதே கதை.
இந்த நாயகன் பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் சாரைத் தவிர யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அப்படியே அவரிடம் கதை சொன்னேன், பிடித்து விட்டது. இதோ அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம். மலையும், மலை சார்ந்த கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது என்கிறார் இயக்குனர் எஸ்.ஜெய்சங்கர்.