ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இயக்குனராக 'ப.பாண்டி' படம் மூலம் அறிமுகமான தனுஷுக்கு தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். வழக்கமான சினிமாவாக இல்லாமல் மாறுபட்ட படமாக 'ப.பாண்டி' படம் அமைந்திருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என தொடர்ந்து பாராட்டி வர, அனைவருக்கும் தனித்தனியாக தனுஷ் நன்றி கூறி வருகிறார். இயக்குனர் கௌதம் மேனன் 'ப.பாண்டி' படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்கும் என்று பாராட்டியிருந்தார்.
இயக்குனர் ஷங்கரும் படத்தைப் பாராட்டி, “ப.பாண்டி, ஒரு சிம்பிளான, அழகான தொடும், தருணங்களைக் கொண்ட படம். தனுஷ் மற்றும் குழுவினருக்கு நன்றி. ராஜ்கிரண், பிரசன்னா, ரேவதி நன்றாக நடித்துள்ளார்கள்,” எனப் பாராட்டியுள்ளார்.
ஷங்கரின் பாராட்டில் உற்சாகமடைந்த பிரசன்னா, “ஓ கடவுளே, இது உண்மையா அல்லது மாயமா, மிக்க நன்றி சார், இதற்கு நிறைய அர்த்தம் உண்டு,” என நன்றி தெரிவித்துள்ளார்.
“மிக்க நன்றி சார், உங்களிடமிருந்து வருவது பல அர்த்தங்களை எங்களுக்குக் கொடுக்கிறது. எங்களது படத்தை நீங்கள் விரும்பியது மகிழ்வைத் தருகிறது,” என தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
படத்தைப் பார்க்கும் பலரும் தொடர்ந்து தனுஷுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்தப் பாராட்டுக்களே படத்தை இரண்டாவது வாரத்தைக் கடந்தும் ஓட வைத்துக் கொண்டிருக்கிறது.