ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் 2013ம் ஆண்டு பல தடங்கல்களுக்குப் பிறகு வெளிவந்து வெற்றி பெற்றது. முதல் பாகத்தை படமாக்கும் போதே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பையும் கிட்டத்தட்ட முடித்ததாக கமல் தெரிவித்திருந்தார். அடுத்த ஒரு ஆண்டுக்குள் இரண்டாம் பாகம் வெளிவந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'விஸ்வரூபம் 2' படத்தின் உரிமை ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்தது. கமல்ஹாசனுக்கும், ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் இடையில் படத்தின் உரிமை தொடர்பாக பிரச்சனை இருந்ததால் படம் அப்படியே கிடப்பில் போனது.
மேலும் சில கோடிகள் செலவு செய்து படத்தை முடிக்க வேண்டியிருந்ததால், ஆஸ்கர் நிறுவனம் செலவு செய்யத் தயாராக இல்லை. கடந்த சில வருடங்களாகவே இது தொடர்பான பேச்சுகள் அடிக்கடி நடந்து வந்தன. ஒரு வழியாக மேல் கொண்டு ஆகும் செலவை தானே செலவு செய்ய கமல்ஹாசன் முடிவெடுத்தார். அதனால், திரும்பவும் ஆஸ்கர் நிறுவனத்திடமிருந்து 'விஸ்வரூபம் 2' படத்தை வாங்கிவிட்டார்.
2015ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து 'உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம்' ஆகிய படங்கள் வந்தன. 2016ம் ஆண்டில் கமல்ஹாசன் நடித்து எந்தப் படமும் வராத நிலையில், 2017லும் அப்படி ஒரு படமும் வராத நிலைமை வர வேண்டாம் என்பதற்காகவே கமல்ஹாசன் 'விஸ்வரூபம் 2' வை திரும்ப வாங்கிவிட்டார் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
'சபாஷ் நாயுடு' படத்தை இந்த ஆண்டில் எப்படியும் படப்பிடிப்பு நடத்தி வெளியிட முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, 'விஸ்வரூபம் 2' படத்திற்குப் பிறகே 'சபாஷ் நாயுடு' படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.