மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் அணியினர் பொறுப்புக்கு வந்த பிறகு புதிய படங்கள் இணையதளங்களில் வெளியாவதை தடுக்க வேண்டும். திரைக்கு வரமுடியாமல் தவிக்கும் சிறிய பட்ஜெட் படங்களை வெளியே கொண்டு வர வேண்டும். படங்களை வாங்கும் சேனல்களுக்கே பாடல்கள், கிளிப்பிங்ஸ் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல விசயங்களை செயல்படுத்தும் முயற்சிகளில் தீவிரமடைந்துள்ளனர். குறிப்பாக, தியேட்டர்களுக்கு படம் வந்த அன்றே அது படமாக்கப்பட்டு வெளியில் பரவுவதை தடுக்க, திருட்டு விசிடி ஆசாமிகள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் சமீபத்தில் விஷால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், படங்கள் இணையதளங்களில் வெளியாவதை தடுக்க டைரக்டர் மிஷ்கின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தினமும் கூடி பைரசியை தடுத்து நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். முக்கியமாக, பைரசியை தடுக்க முடியாது என்றாலும் குறைக்க முடியும் என்பதால், தியேட்டருக்கு வந்து சினிமா பாருங்கள். இணையதளங்களில், திருட்டு விசிடிக்களில் பார்க்காதீர்கள். இப்படி செய்வதால் பணம் செலவு பண்ணி படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை பொதுமக்களிடம் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறார்களாம்.