ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சமீபகாலமாக நடிகர் நடிகைகள் மட்டுமின்றி இயக்குனர்கள் மத்தியிலும் நல்ல ஆரோக்யமான நட்பு நிலவி வருகிறது. ஒருவரது படைப்பை இன்னொரு புகழ்ந்து பேசுவது. கருத்து சொல்வது என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில், நடிகர் தனுஷின் ப.பாண்டி படம் வெளியானபோது கே.வி.ஆனந்த், எஸ்.ஜே.சூர்யா உள்பட பல இயக்குனர்களே அந்த படத்தின் கதையை பாராட்டினர்.
அதேபோல் தற்போது தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வரும் கெளதம்மேனனும் ப.பாண்டி படத்தை வெகுவாக பாராட்டியிருக்கிறார். அதோடு, கிளைமாக்சில் பிரிந்த ப.பாண்டி, பூந்தென்றல் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதை அறிய ஆவலாக உள்ளது. அதனால் ப.பாண்டியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார் கெளதம்மேனன்.