சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
அரண்மனை-2, நாயகி என சில ஹாரர் படங்களில் நடித்துள்ள த்ரிஷா, தற்போது மாதேஷ் இயக்கத்தில் நடித்திருக்கும் மோகினி படம் அவரை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்லும் படமாக வெளிவர இருப்பதாக சொல்கிறார்கள். காரணம், எத்தனையோ பேய் படங்கள் வந்து கொண்டிருந்தபோதும் இந்த படம் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்குமாம். பேய் படம் என்றாலே கத்தல், கதறல், அலறல், மிரட்டல் என்றுதான் அதிரடியாக படமாக்குவார்கள். ஆனால் இந்த மோகினி படம் அமானுஷ்ய உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாம்.
அதோடு, இந்த படத்தில் வைசாலி-வைஷ்ணவி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. அதில் ஒருவர் பிளாஷ்பேக்கில் வந்து செல்வாராம். இந்த இரண்டு வேடங்களிலும் ஒன்றுக்கொன்று சாயல் இல்லாத வகையில், மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுத்திருக்கிறாராம் த்ரிஷா. அதற்காக அவர் நிறைய ஹோம் ஒர்க்கும் செய்துள்ளாராம். ஆக இத்தனை வருட சினிமா பயணத்தில் த்ரிஷாவுக்கு இந்த மோகினி அழுத்தமான முத்திரை பதிக்கும் படமாக இருக்கும் என்கிறார்கள்.