ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங்கின் அப்பாவாக நடித்து கவனிக்கப்படும் நடிகரானவர் காளி வெங்கட். அதற்கு முன்பு வரை காமெடியனாக மட்டுமே இருந்து வந்த அவரை இப்போது மாறுபட்ட கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் ஹீரோவின் நண்பன் என்பதை தாண்டி தற்போது குணசித்ர நடிகர் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார் காளி வெங்கட்.
மேலும், யதார்த்த மனிதரான காளிவெங்கட், தன்னைப்பற்றிய விசயங்களையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அந்த வகையில், சினிமாவில் நடிகராவதற்கு முன்பு சொந்த ஊரான கோவில்பட்டியில் இருந்தபோது எனது தந்தையுடன் கொத்தனார் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது வேலை முடிந்து கை கால்களை கழுவிக்கொண்டு வந்ததும் சம்பளம் கொடுப்பார்கள். கையில் ஈரம் காய்வதற்கு முன்பு சம்பளத்தை வாங்குவோம். அது மனதுக்கு நிறைவாக இருக்கும்.
அதேபோல் இப்போது சில தயாரிப்பாளர்களும் நடித்து முடித்ததும் உடனே சம்பளத்தை தருகிறார்கள். அப்போது எனக்கு கொத்தனார் வேலை செய்து விட்டு ஈரம் காய்வதற்கு முன்பு சம்பளம் வாங்கிய அந்த பழைய ஞாபகங்கள் தான் மனதில் வந்து செல்லும். என்ன இருந்தாலும் வியர்வை சிந்தி உழைத்த உழைப்புக்கு உடனடியாக கூலி கிடைப்பதில் இருக்கிற சந்தோசம் எதிலும் இருக்க முடியாது என்கிறார் காளி வெங்கட்.