அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, ஸ்ரேயா, தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருட ஆரம்பத்திலேயே ஆரம்பமானது. அவ்வப்போது படப்பிடிப்பு நடப்பதும், கேன்சல் ஆவதும், தள்ளிப் போவதும் என படமாக்கிக் கொண்டிருந்தார்கள். கடந்த வாரம் கூட தாய்லாந்து நாட்டிற்கு படப்பிடிப்புக்குச் சென்று விட்டு, திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்காமல் படக்குழு திரும்பி வந்ததாக செய்திகள் வெளியானது.
சிம்பு இந்தப் படத்தில் இரண்டு, மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு ஆரம்பமான சமயத்தில் 80களின் ஹீரோ போன்ற தோற்றத்திலும், பின்னர் அஸ்வின் தாத்தா என்ற வயதான கதாபாத்திரத்திலும் அவர் உள்ள புகைப்படங்களும், போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.
இப்போது படத்தை ஜுன் மாதம் ரம்ஜான் தினத்தில் படத்தை வெளியிடப் போவதாக படத்தின் கதாநாயகனாக சிம்பு அறிவித்துள்ளார். “ஏஏஏ1 டைமன்ஷன் 2017 ஜுன் ரம்ஜான் முதல்... ஒரு மாற்றத்திற்கு தாமதம் என்பது தான் லேட்டஸ்ட்” என்று சிம்பு குறிப்பிட்டிருக்கிறார்.
அப்படியென்றால் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் இரண்டு பாகமாக வெளிவரப் போகிறது என சொல்ல வருகிறார்கள். முதல் பாகத்தை முதலில் சரியாக வெளியிடுங்கள், அதன்பின் இரண்டாம் பாகத்தைப் பற்றிப் பேசுங்கள் என கமெண்ட்டுகள் வரப் போவது நிச்சயம். ஏன் என்றால் சிம்பு படமாச்சே....???.