ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு பல நடிகர்கள் ரசிகர்களாக உள்ளனர். அவர்களில் ஜெயம்ரவி குறிப்பிடத்தக்கவர். நான் நயன்தாராவின் தீவிரமான ரசிகன். அதனால் அவருடன் ஒரு படத்திலாவது நடித்தே தீர வேண்டும் என்று பல மேடைகளில் ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்து வந்தார். அதையடுத்து, தனது அண்ணன் மோகன்ராஜா தன்னை நாயகனாக வைத்து இயக்கிய தனி ஒருவன் படத்திற்கு நயன்தாராவை ஹீரோயினியாக புக் பண்ணியே ஆக வேண்டும் என்று சொல்லி, ஒருவழியாக நயன்தாராவுடன் டூயட் பாடினார் ஜெயம்ரவி.
அவரைப்போன்றுதான் சிவகார்த்திகேயனும் நயன்தாராவின் தீவிரமான ரசிகராம். ஆனால் ஆரம்பத்தில் அவரை தன்னுடன் நடிக்க கேட்டால் என்ன சொல்வாரோ என தயங்கி வந்த சிவகார்த்திகேயன், அவர் விஜயசேதுபதியுடன் நானும் ரெளடிதான் படத்தில் நடித்ததை அடுத்து கண்டிப்பாக அடுத்து நயன்தாராவுடன் நடித்தே தீருவது என்று மோகன்ராஜா தன்னிடம் வேலைக்காரன் படத்திற்காக கதை சொல்ல வந்தபோதே நயன்தாராதான் இந்த பட நாயகி என்று அடித்து சொல்லிவிட்டாராம்.
ஆக, வேலைக்காரன் படத்தில் தற்போது சிவகார்த்திகேயனுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் நயன்தாரா. அதோடு, உங்களுடன் டூயட் பாடவேண்டும் என்ற எனது கனவு இப்போதுதான் நனவாகியிருக்கிறது என்று நயன்தாராவிடமே ஓப்பனாக சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.