ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதுமுக இயக்குனர் ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள படம் தப்புதண்டா. சத்யா நாயக னாக நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஸ்வேதா கய். விக் ரம் பிரபு நாயகனாக நடித்த இது என்ன மாயம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த ஸ்வேதா கய், இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, எனது பெயர் ஸ்வேதா கய் என்றிருப்பதால் பலரும் என்னை வடஇந்திய பெண்ணாக நினைனக்கிறார்கள். ஆனால் நான் சுத்த தமிழ் பெண். பெரும்பாலும் நடிகைகள் தங்களது பெயருக்கு பின்னால் தங்கள் தந்தையின் பெயரை இணைத்து கொள்வார்கள். ஆனால் நான் என் அம்மா காயத்ரியின் பெயரை எனது பெயருடன் இணைத்து ஸ்வேதா கய் ஆகியிருக்கிறேன்.
மேலும், இந்த படவாய்ப்பு எனக்கு அத்தனை எளிதில் கிடைத்து விடவில்லை. ஆடிசனுக்கு சென்றபோது பல கோணங்களில் நடித்துக்காட்ட சொன்னார்கள். பெரிய டயலாக் பேப்பரை கொடுத்து பேச வைத்தனர். அதில் ஓகே ஆன பிறகு நான் ஒல்லியாக இருப்பதாக சொன்னார்கள். இதனால் நான் செலக்ட் ஆவேனா மாட்டேனா என பயந்து கொண்டே இருந்தேன்.
அதோடு, இந்த படத்தின் ஆடிசனுக்கு 60 நடிகைகள் வந்திருந்தனர். ஆக, மிகப்பெரிய ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகுதான் இந்த படத்தில் நடிக்க நான் கமிட்டானேன். அப்படி கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறேன். கண்டிப்பாக இந்த படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்கிறார் ஸ்வேதா கய்.