சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், அப்படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிக்கும் ஒரு பக்க கதை படத்தை இயக்கினார். படம் தயாராகி ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு மேலாக ஒரு பக்க கதை படம் முடங்கிக் கிடக்கிறது. இதனால், விஜய் சேதுபதிக்கு ஒரு கதை சொன்னார் பாலாஜி, அது பிடித்துபோனது.
பாலாஜி தரணீதரன் - விஜய் சேதுபதி மீண்டும் இணையும் சீதக்காதி படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தனக்கு கால்ஷீட் கொடுத்து உதவிய விஜய் சேதுபதிக்கு அவரே எதிர்பாராத அளவுக்கு பெரிய சம்பளத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார் பாலாஜி தரணீதரன்.
விஜய்சேதுபதியின் 25 படமாக உருவாகும் சீதக்காதி படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 24ம் தேதி தொடங்கவுள்ளது. இப்படத்தில் மேடைக் கலைஞராக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். மேடைக் கலைஞரின் வாழ்க்கை பயணம்தான் சீதக்காதியின் கதையாம்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தைப் போலவே இந்தப்படத்திலும் காமெடியான திரைக்கதை இருக்குமாம். இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடி என்று யாருமே கிடையாது. அதே சமயம், நிறைய கதாநாயகிகள் இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளார்கள். அதில் நயன்தாராவும் அடக்கம். இது குறித்து நயன்தாராவிடம் விஜய்சேதுபதியே பேசியுள்ளதாக தகவல்.