ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ஏஏஏ. அதாவது, அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.
இந்தப் படத்தில் 3 கெட்டப்களில் சிம்பு நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சனாகான் நடித்து வருகிறார்கள்.
சிம்பு நடிக்கும் 3 கெட்டப்பகளில் மதுரை மைக்கேல் கெட்டப்புக்கான காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் முடிவடைந்துள்ளது. அஸ்வின் தாத்தா கெட்டப்பில் சிம்பு நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த மாதம் தாய்லாந்துக்கு சென்றது படக்குழு.
சிம்பு உள்ளிட்ட ஏஏஏ படக்குழுவினர் ஏறக்குறைய 20 நாட்களுக்கு மேலாக தாய்லாந்தில் இருந்தனர். ஆனால், 20 நாட்களில் வெறும் 2 நாட்கள் மட்டுமே முழுமையான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாம். இதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் டென்ஷனாகிவிட்டாராம். அதோடு, உடனடியாக சென்னைக்கு திரும்பி வரும்படி உத்தரவிட்டிருக்கிறார்.
அதன்படி, ஏஏஏ படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு உடனடியாக ஊர் திரும்பியது படக்குழு. அதன் பிறகு, மீண்டும் தாய்லாந்துக்கு செல்ல திட்டமிட்டார்கள். அதற்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஒப்புக்கொள்ளவில்லை. தாய்லாந்தில் எடுக்க திட்டமிட்ட அந்தக் காட்சிகள் அனைத்தையும் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் படமாக்குங்கள் என்று சொல்லிவிட்டாராம். இதன் காரணமாக ஏஏஏ படத்துக்கு மீண்டும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.