அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
“ராசாத்தி என் உசுரு என்னுதில்லை பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள நீ போனா என் உடம்பு மண்னுக்குள்ள ராவோடு சேதி வரும் வாடி புள்ளகாரை வீட்டு திண்ணையில கறிக்கு மஞ்சள் அறைக்கையிலே மஞ்சளை அறைக்கு முன்னே மனசை அறைச்சவளே” என்ற இந்த சூப்பர் ஹிட் பாடல்தான் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் பிரசாந்த், ஆனந்த், அனு அகர்வால், ஹீரா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'திருடா திருடா' படத்தின் தோல்விக்குக் காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா ?. நம்பித்தான் ஆக வேண்டும், ஏனென்றால் இதைச் சொன்னதே இந்தப் படத்தின் இயக்குனர் மணிரத்னம்.
1993ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'திருடா திருடா' படம் ஒரு தோல்விப் படம். ஆனால், படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள். மேலே சொன்ன பாடல்களைத் தவிர, “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், கொஞ்சம் நிலவு, வீரபாண்டிக் கோட்டையிலே, தீ தீ, புத்தம் புது பூமி, ஆத்துக்குள்ள அயிர மீனு” என அனைத்துப் பாடல்களுமே அன்று அடிக்கடி அனைவரது வீடுகளிலும் ஒலித்த பாடல்கள்.
பாடல்கள் ஹிட்டான அளவிற்குப் படம் ஹிட்டாகவில்லை, படுதோல்வியடைந்தது. அதற்கு 'ராசாத்தி என் உசுரு' பாடலும் ஒரு காரணம் என இயக்குனர் மணிரத்னம் சொல்லியிருக்கிறார். அதை சமீபத்திய பேட்டி ஒன்றில் வைரமுத்து வெளி உலகிற்கு முதல் முறையாக தெரிவித்துள்ளார்.
“படம் வெளியான பிறகு மணிரத்னம் சொன்னாரு, இந்தப் படத்தை தோல்விக்கு அழைத்துச் சென்றதில் இந்த பாட்டுக்குப் பெரிய பங்குண்டு என்றார். இதுவரைக்கும் இதைப் பத்தி சொன்னதில்லை, ரகுமானையும், மணிரத்னத்தையும் சாட்சியா வச்சிக்கிட்டு சொல்றேன்.
நான் ஒரு பொழுது போக்குப் படம் எடுத்திருக்கிறேன், மென்மையா கடந்து போகிற படம். எல்லாரும் வந்து சந்தோஷமா பார்த்துட்டு போகணும். நீங்க இந்தப் பாட்டுல ஒரு காதல் காவியத்தையே படைச்சிட்டீங்க.
காரை வீட்டு திண்ணையில கறிக்கு மஞ்சள் அறைக்கையிலே, மஞ்சளை அறைக்கு முன்னே மனசை அறைச்சவளே....இந்த வரிகளைப் பார்த்துட்டு ரசிகன் ஒரு மகா காதல் காவியத்தை மணிரத்னம் எடுத்திருக்காருன்னு உள்ள வந்துட்டான். அங்க வந்து பார்த்தால் பொழுது போக்கா இருக்கு.
இந்தப் படத்துக்கும், பாட்டுக்கும் உறவு இல்லையே என்று ஏமாந்து போய் விட்டான். அப்போ, பாத்திரம் அறிந்து பிச்சை போட வேண்டும் என்று சொல்வார்கள். படமறிந்து பாடல் எழுத வேண்டும் என்பதை நான் கற்றுக் கொண்டதற்கு 'திருடா திருடா' ஒரு எடுத்துக்காட்டு,” என்று அந்த அனுபவத்தை விவரித்தார் வைரமுத்து.
தொடர்ந்து பேசிய மணிரத்னம், “பாட்டு எதும் போதே எனக்குத் தெரியும். ஆனால், அவர் கிட்ட சொன்ன சிச்சுவேஷன் அப்படி. அவரை ஊக்கப்படுத்தணும்கறதுக்காக நான் கொஞ்சம் கூட சேர்த்து சொல்லிட்டேன். தேவதாஸ் மாதிரி மாட்டு வண்டியில போயிட்டிருக்காருன்னு சொன்னேன். அவர் ஃபுல்லா உள்ள போயிட்டாரு. பாட்டு அற்புதமான பாட்டு, இந்தப் படத்துல வைக்கக் கூடாது, அடுத்த படத்துல வச்சிக்கலாம்னு தோணுது. ஆனாலும் விட மனசில்லை, சரின்னு படத்துல வச்சிட்டேன். எக்ஸ்பரிமென்ட் பண்ணும் போது இப்படியெல்லாம் நடக்கும், வேற வழியில்லை,” என்றார்.
ஒரு பாடல் படத்தின் வெற்றிக்கு எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்குமோ, அதே போல ஒரு பாடல் படத்தின் தோல்விக்கும் காரணமாக இருக்கும் என்பதை இதுவரை கேட்டிருக்கிறீர்களா..?. இப்போது கேட்டிருப்பீர்கள்.