ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதியவர்கள் இணைந்து உருவாக்கி வரும் படம் திருப்பதிசாமி குடும்பம். ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ஜே.கே, ஜாகீன், லட்சுமி ஐஸ்வர்யா என்ற புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் தேவதர்ஷினி, முத்துராமன் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒய்.எம்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். சாம்.டி.ராஜ் இசை அமைக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் அக்மார்க்க குடும்ப கதை என்கிறார் இயக்குனர் சுரேஷ் சண்முகம். இவர் சுரேஷ் என்ற பெயரில் அரசு, கம்பீரம் படங்களை இயக்கியவர்.
படம் பற்றி மேலும் அவர் கூறியதாவது: கால் டாக்சி டிரைவரான திருப்பதிசாமியின் குடும்பம், அழகான மகிழ்ச்சியான குடும்பம். மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்கொண்டிருக்கிறது. திடீரென்று திருப்பதிசாமியின் மகன்களுக்கு ஒரு பிரச்சினை வந்து சேர்கிறது. அதிலிருந்து மகன்களை அவர் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை. அது என்ன பிரச்சினை என்பது யாரும் யூகிக்க முடியாத ஒன்று. குடும்ப செண்டிமெண்ட்டுடன், ஆக்ஷன், காமெடி கலந்து நல்லதொரு பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி உள்ளது. என்றார் சுரேஷ் சண்முகம்.