ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நான் இயக்கிய மூன்று படங்களில் பாரதிராஜாவை நடிக்க வைக்க ஆசைப் பட்டேன். அவரை மனதில் கொண்டுதான் அந்த கேரக்டர்களை உருவாக்கி னேன். ஆனால் அவரை நடிக்க அழைத்தபோது மறுத்து விட்டார் என்கிறார் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் இயக்கிய சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக ஆகிய மூன்று படங்களிலும் விஜயகுமார் நடித்திருந்த வேடங்க ளில் நடிக்க முதலில் இயக்குனர் பாரதிராஜாவைத்தான் அணுகினேன். அந்த கதைகளை ரெடி பண்ணியபோது அவர்தான் மனதில் வந்தார். அதனால் எப்படியேனும் அவரை நடிக்க வைத்து விட வேண்டும் என்று மூன்று படங்களை இயக்குவதற்கு முன்பும் அவரை அணுகினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
காரணம் கேட்டபோது, நான் நினைத்ததை சுதந்திரமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவன். அதனால் மற்றவர்களின் எண்ணங்களுக்குள் என்னால் என்னை அடக்கிக்கொண்டு நடிப்பது இயலாத காரியம் என்று மறுத்து விட்டார். அப்படி அவர் நடித்திருந்தால் நான் இயக்கிய மூன்று படங்களில் பாரதிராஜா நடித்த பெருமை எனக்கு கிடைத்திருக்கும் என்கிறார் கே.எஸ். ரவிக்குமார்.