ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியத் திரையுலகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் 'பாகுபலி 2'. இப்படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதுவரை இந்தியப் படங்கள் வெளியிடப்படாத நாடுகளில் கூட படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இருந்தாலும் இந்தியாவிற்குள் கர்நாடக மாநிலத்தில் இப்படம் வெளியாகுமா என்பது சந்தேகமாக உள்ளது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக விலையை நிர்ணயம் செய்துள்ளார்களாம். சுமார் 40 கோடி ரூபாய் கர்நாடக உரிமை என்று சொல்லப்பட்ட நிலையில் படத்தை வாங்க யாரும் முன்வரவில்லையாம். மேலும், சத்யராஜ் இப்படத்தில் நடித்திருப்பதால் கன்னட அமைப்புகள் வேறு படத்தை வெளியிடக் கூடாது என மிரட்டல் விடுத்து வருகிறார்களாம். தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க சத்யராஜும் மன்னிப்புக் கேட்கத் தயாராகிவிட்டார் என்கிறார்கள்.
அதற்குள் 40 கோடி ரூபாய் விலை கொடுத்து யாரும் வாங்க முன் வரவில்லை என்றால் தயாரிப்பாளர்களே அங்கு படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்துவிடுவார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.