ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
திரைப்படக் கல்லூரி என்றாலே அது எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் டிவி பயிற்சிக் கல்லூரி என்ற ஒன்றுதான் பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இக் கல்லூரியில் படித்த பலர் இன்று புகழ் பெற்ற இயக்குனர்களாகவும், ஒளிப்பதிவாளர்களாகவும், படத் தொகுப்பாளர்களாகவும், நடிகர்களாகவும் இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கிறார்கள். அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனிலும் பல துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் தனியார் திரைப்படக் கல்லூரிகள் அதிகமாக வர ஆரம்பித்து விட்டன. பிரபல திரைப்படக் கலைஞரான மறைந்த எல்வி. பிரசாத் பெயரில் சென்னை வடபழனியில் தனியார் திரைப்படக் கல்லூரி ஒன்று சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பமானது. அடுத்து பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் 'போஃடா' என்ற பெயரில் ஒரு திரைப்படக் கல்லூரியை கோடம்பாக்கத்தில் ஆரம்பித்தார். பிரபல ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனன் 'மைன்ட் ஸ்கிரீன்' என்ற பெயரில் ஒரு திரைப்படக் கல்லூரியை பல வருடங்களாக நடித்து வருகிறார். 25 வருடங்களுக்கு முன்பு சென்னை, தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் திரைப்படக் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அது மூடப்பட்டது.
இன்னும் சென்னையில் வடபழனி, கோடம்பாக்கத்தில் சில கல்லூரிகள் நடந்து வருகின்றன. இப்போது புதிதாக பிரபல இயக்குனர் பாரதிராஜா, அவருடைய பெயரில் ஒரு புதிய திரைப்படக் கல்லூரியை நேற்று ரஜினிகாந்த், கமல்ஹாசனை வைத்து ஆரம்பித்துள்ளார். தொழில்நுட்பங்கள் இன்று அதிகம் வளர்ந்துள்ள நிலையில் திரைப்படக் கல்லூரிப் படிப்புகள் என்பது அந்தத் தொழிலில் இறங்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான ஒன்றுதான். ஆனால், அந்தக் கல்லூரிகள் சில லட்சங்களைப் பயிற்சிக் கட்டணமாக வாங்குவதாகச் சொல்கிறார்கள்.
தென்னிந்திய திரைப்படத் துறைக்கு மையமாக இருக்கும் சென்னையில் திரைப்படத் துறைக்குத் தேவையான ஸ்டுடியோக்கள் பலவும் மூடப்பட்டுவிட்டன. ஏவிஎம், பிரசாத் ஆகிய ஸ்டுடியோக்களில் கூட ஓரிரு தளங்கள் மட்டுமே உள்ளன. அவற்றைக் கூட தொலைக்காட்சி நிறுவனங்கள்தான் பயன்படுத்தி வருகின்றன.
திரைப்படத் துறைக்குத் தேவையான ஸ்டுடியோக்கள் சென்னையில் அதிகம் தேவைப்படும் நிலையில், சினிமாவை வாழ வைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்பவர்கள் புதிய ஸ்டுடியோக்களை திறப்பதைவிட்டு விட்டு, பயிற்சி கல்லூரிகளை ஆரம்பிப்பது ஆச்சரியமாக உள்ளது என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.