ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாரதிராஜா இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சினிமா என்ற பெயரில் திரைப்பட பயிற்சிக் கல்லூரி ஒன்றை இயக்குனர் பாரதிராஜா துவக்கி உள்ளார். இதில் திரைக்கதை அமைப்பு இயக்கம், ஒளிப்பதிவு, சவுண்ட் என்ஜினீயரிங், எடிட்டிங், நடிப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் பாடம் கற்றுத் தரப்பட இருக்கிறது.
இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. பயிற்சி நிறுவனத்தை ரஜினிகாந்த் திறந்து வைக்கிறார். பிரிவியூ தியேட்டரை கமல் திறந்து வைக்கிறார். பாரதிதாசன் பல்கலைகழக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை துணை வேந்தர் முத்துக்குமார் வழங்குகிறார். அதனை வைரமுத்து பெற்றுக் கொள்கிறார். இயக்குனர் மணிரத்னம் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை வழங்குகிறார். விழாவில் பாரதிராஜா அறிமுகப்படுத்திய ராதிகா, ராதா, ரேவதி, ரேகா மற்றும் சுஹாசின் ஆகியோர் குத்துவிளக்கேற்றுகிறார்கள்.
இதுகுறித்து பாரதிராஜா கூறியிருப்பதாவது: தமிழ் மண்ணின் சாரத்தை திரையுலகில் வாழ்க்கையாய் பதியவைத்த நான் இன்று இந்திய சினிமாவை உலக சினிமாவோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். என் திரைப்பட்டறையிலிருந்து நிறைய படைப்பாளிகள் தொழில்நுட்ப கலைஞர்கள் உருவாகி உயர்ந்து நிற்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் சொல்லித் தந்த பாடத்தை பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்றுவிக்க விரும்புகிறேன். இந்திய சினிமாவின் சாதனையாளர்கள் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். நம் திரைக்கலையை தொழில்நுட்பத்தோடு இணைந்து இந்திய திரையுலகை உலகத் தரத்திற்கு உயர்த்தும் முயற்சியே இது. இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.