ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் சேதுபதிக்கு மக்கள் மத்தியில் கவன ஈர்ப்பு கிடைக்க காணமான படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். பாலாஜி தரணீதரன் இயக்கிய இந்தப் படத்துக்குப் பிறகே விஜய்சேதுபதி மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர்கள் அவரைத் தேடிப்போனார்கள். விஜய்சேதுபதிக்கு லைஃப் கிடைக்க காரணமான 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் அந்தப்படத்தை தொடர்ந்து 'ஒரு பக்க கதை' என்ற படத்தை இயக்கினார். பல வருடங்களாக அந்தப் படம் முடங்கிக்கிடக்கிறது.
நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் இருவரும் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஒரு பக்க கதை படத்தினால் பல வருடங்கள் முடங்கிப்போனார் இயக்குநர் பாலாஜி தரணீதரன். எனவே தன்னுடைய நண்பருக்கு உதவும் எண்ணத்தில், இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய்சேதுபதி.
இயக்குனர் பாலாஜி தரணீதரனும், நடிகர் விஜய்சேதுபதியும் மீண்டும் இணைகிற படத்திற்கு 'சீதக்காதி' என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கவிஞர் சீதக்காதி பெயரை தலைப்பாகக் கொண்டு உருவாகும் இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவிருக்கிறது என்று தகவல் அடிபடுகிறது.