ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இன்றைய தேதியில் கோடம்பாக்கத்தில் இரண்டு ஹீரோக்களின் பேங்க் பேலன்ஸ்தான் தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒருவர் ஜி.வி.பிரகாஷ்குமார்.
இன்னொருவர் விஜய்சேதுபதி. ஒருகாலத்தில் நம்பர் ஒன் ஹீரோவாக இருந்த ராமராஜன் 40 படங்கள் கைவசம் வைத்திருந்தார் என்பது வரலாறு. போகிற போக்கைப் பார்த்தால் ராமராஜனின் சாதனையை விஜய்சேதுபதி முறியடித்து விடுவார் போலிருக்கிறது.
விஜய்சேதுபதி நடிப்பதாக வாரத்துக்கு ஒரு புதிய பட அறிவிப்பு வெளியாகிறது. லேட்டஸ்டாக ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஜய்சேதுபதி. அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கும் புதிய படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்று வித்தியாசமாக டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
'காமெடி கலந்த வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படம் இது என்பதால் இப்படி வித்தியாசமான தலைப்பை வைத்திருக்கிறேன்' என்று கூறுகிறார் இப்படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார்! நிகரிகா என்ற ஆந்திரதேசத்து அழகி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் உறவினராம்.