காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்கும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் ஆரம்பமானது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஆரம்பமாகி சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது. படத்தின் நாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சமந்தா படத்திலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். விஜய் சேதுபதியும் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என்று தகவல் வெளியானது. ஆனால், அவரும் படத்திலிருந்து தற்போது விலகிவிட்டார்.
தனுஷ் 'ப.பாண்டி' படத்தை இயக்கச் சென்றதாலும், 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் நடிக்கச் சென்றதாலும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு மேலும் தாமதமானது. மார்ச் மாதம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் என படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்திருந்தார். ஆனால், அப்போதும் ஆரம்பமாகவில்லை. தனுஷ் இயக்கிய 'ப.பாண்டி' படம் இன்னும் சில நாட்களில் வெளியாகப் போகிறது. 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. அதைத் தொடர்ந்து 'வட சென்னை' படப்பிடிப்பை மீண்டும் நடத்தலாம் என தனுஷ் முடிவெடுத்து அதன்படி இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பமானது.
“பவர் பாண்டி இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ள நிலையில் 'வட சென்னை' படப்பிடிப்பு மீண்டும் இன்று முதல் ஆரம்பமாகிறது. ஒளிவீசும் சூரியன், கடல், சிறந்த மக்கள், வெற்றிமாறனின் தனித்துவமான படப்பிடிப்புக் களம்” என தனுஷ் தெரிவித்துள்ளார்.