ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மெட்ராஸ் படத்தின் மூலம் அறிமுகமான கேத்ரின் தெரசா தற்போது நடித்துள்ள படம் கடம்பன். இதில் அவர் மலைவாழ் பெண்ணாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் அவர் எந்த வசதியும் இல்லாமல், காலில் செருப்பு கூட அணியாமல் 50 நாள் நடித்துள்ளார். இதற்காக அவருக்கு வழக்கத்தை விட அதிகமான சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கேத்ரின் தெரசா கூறியதாவது:
கடம்பன் படத்தின் கதையை இயக்குனர் ராகவா என்னிடம் கூறும்போது இந்தப் படத்துக்காக ரொம்ப கஷ்டப்பட வேண்டியது இருக்கும், முழு படமும் காட்டுக்குள்தான் நடக்கும், செருப்பு போட முடியாது. மின்சார வசதி இருக்காது, போன் வசதி இருக்காது என்று சொன்னார். அதற்கு ஒப்புக் கொண்டுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டேன். மற்ற படங்களுக்கு வாங்கும் சம்ளம்தான் வாங்கினேன்.
பணம் ஒன்றே குறிக்கோளாக இருந்தால் அதற்கு பக்கா கமர்ஷியல் படங்கள் இருக்கிறது. பணத்தை மட்டும் நினைத்திருந்தால் கடம்பனில் நடித்திருக்கவே மாட்டேன். ஆனால் மக்களுக்கு நல்ல விஷயத்தை சொல்கிற அற்புதமான கதை. மலைவாழ் மக்களின் வலியை பேசுகிற கதை. வாழ்நாள் முழுவதும் வலியுடன் வாழும் மக்களின் கதையை 50 நாள் வலியுடன் நடிக்க கூடாதா என்ன?.
படத்தில் ஒரு குண்டு வெடிக்கிற காட்சி... குண்டு வெடிக்கும்போது நான் தூக்கி எறியப்படுவேன். எனக்கு பதிலாக ஒரு டூப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஏன் நானே நடிக்க கூடாது என்றேன். அதன்பிறகு குண்டு வெடிக்கும்போது என்னை ரோப் கட்டி வெளியே இழுத்து போட்டார்கள். எனக்கு அதிக சத்தம் பிடிக்காது என்பதால் காதில் காட்டன் வைத்து அடைத்துக் கொண்டேன். நல்ல பாதுகாப்பு ஏற்பாடுகளை சண்டை கலைஞர்கள் செய்தார்கள். இந்த அளவிற்கு கஷ்டப்படுவது பணத்துக்காக அல்ல கதைக்காக. என்றார்.
ஒரு தெலுங்கு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவற்கு 65 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுவது குறித்து கேட்டபோது: அந்த படத்தின் இயக்குனர் சீனு அற்புதமான இயக்குனர். எனக்கு நெருங்கிய நண்பர். அவர் ஒரு பாட்டுக்கு ஆட முடியுமா என்றார். முதலில் விருப்பம் இல்லை என்றுதான் சொன்னேன். பாட்டை கேளுங்கள் பிடித்தால் ஆடுங்கள் என்றார். பாட்டு எனக்கு பிடித்திருந்தது ஆடினேன். அதற்குரிய சம்பளத்தை தயாரிப்பாளர் மகிழ்ச்சியுடன் கொடுத்தார். என்றார்.