ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக மலையாள சினிமாவில் ஒரு படத்தில் நடித்ததும் இரண்டாவது படத்திற்கு தமிழுக்கு வந்து விடுகிறார்கள் கேரளத்து நடிகைகள். அந்த வரிசையில், மஞ்சிமா மோகன், சாய் பல்லவி, மடோனா ஆகியோரைத் தொடர்ந்து தற்போது தமிழில் இறக்குமதியாகியுள்ள இன்னொரு கேரளத்து நடிகைதான் அர்த்தனா. இவர் கடந்த ஆண்டு மலையாளத்தில் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் நடித்த முதுகவ் என்ற படத்தில் அறிமுகமானவர். அதையடுத்து, தமிழுக்கு வந்து சமுத்திரகனியின் தொண்டன், மெரினா பாண்டிராஜ் தயாரிக்கும் செம, சுசீந்திரன் கதை எழுதும் வெண்ணிலா கபடிக்குழு-2 ஆகிய மூன்று படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இதில், தொண்டன் படப்பிடிப்பு முடிந்து விட்டது. மற்ற படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அர்த்தனா, நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற தொண் டன் பிரஸ்மீட்டில் கலந்து கொண்டவர், மேடையில் முடிந்த வரை மலையாளம் கலந்த தமிழிலேயே பேசினார். அதைப்பார்த்து, இப்படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்துள்ள சுனைனா மிகப்பெரிய ஆச்சர்யத்தை தனது முகத்தில் வெளிப்படுத்தினார். காரணம், காதலில் விழுந்தேன் படத்தில் இருந்து தமிழ்ப்படங்களில் நடித்து வந்தபோதும் இன்னமும் சுனைனாவுக்கு சுத்தமாக தமிழ் பேச தெரியாது. என்றாலும், அர்த்தனா அளவுக்காவது தானும் தமிழில் பேச வேண்டும் என்றும் அவர் முயற்சிக்கவில்லை. வழக்கம்போல் ஆங்கிலத்திலேயே பேசி விட்டு இருக்கையில் அமர்ந்துவிட்டார்.