ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமுத்திரகனி இயக்கி தயாரித்து கதையின் நாயகனாக நடித்த 'அப்பா' கடந்த ஆண்டு வெளியான மிகச்சிறந்த படம். தமிழில் வர்த்தக வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்த படத்தை மலையாளத்திலும் ரீ-மேக் செய்து வருகிறார். 'ஆகாசமிட்டாய்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி நடித்த வேடத்தில் ஜெயராம் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.
இப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பும் சமீபத்தில் கொச்சியில் துவங்கியது. படப்பிடிப்பு துவங்கிய ஒரு சில நாட்களிலேயே வரலட்சுமி சரத்குமார் ஆகாசமிட்டாய் படத்திலிருந்து விலகிவிட்டார். இது சம்பந்தமாக வரலட்சுமி சரத்குமார் சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் ''ஆணாதிக்க பிரச்சனைகளால் 'ஆகாசமிட்டாய்' படத்திலிருந்து விலகுகிறேன்'' என்று ட்வீட் செய்திருந்தார்.
உண்மையில் சொகுசு ஹோட்டலில் தங்க வைக்க மறுத்து சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் தங்க சொன்னதால் தான் வரலட்சுமி விலகினார். வரலட்சுமி விலகியதை தொடர்ந்து இப்போது அந்த கேரக்டரில் இனியா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடந்து வருகிறது.