ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அப்பா படத்திற்கு பிறகு சமுத்திரகனி தயாரித்து இயக்கும் படம் தொண்டன். சமுத்திரகனியுடன் சுனைனா, விக்ராந்த், அர்த்தனா, சூரி, தம்பி ராமய்யா, கஞ்சா கருப்பு, வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை பற்றி சமுத்திரகனி அளித்த பேட்டி வருமாறு:
படத்தின் தலைப்பு தொண்டன் என்று இருப்பதால் இதனை அரசியல்படம் என்று நினைக்கிறார்கள். இது கண்டிப்பாக அரசியல் படம் அல்ல. மக்களுக்கு சேவை செய்யும் ஒவ்வொரு மனிதனும் தொண்டன்தான் என்ற பொருளில்தான்தான் படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நான் எப்போதுமே செய்தி தாள்களில் வரும் நடப்பு செய்திகளில் இருந்து கதை பிடிப்பவன். ஈரோட்டு கல்லூரி ஒன்றில் ஒரு பாதகன் ஒரு மாணவியை நூற்றுக் கணக்கான மாணவர்கள் சுற்றி நிற்கும்போது கட்டையால் அடித்துக் கொன்று இருக்கிறான். அதனை அத்தனை மாணவர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். அதை தடுக்கவோ, அந்த பெண்ணை காப்பாற்றவோ அவர்கள் துணியவில்லை. இந்தச் செய்தியை படித்தபோது ஏன் அவர்கள் மவுனமாக நின்றார்கள் என்ற வினாவுக்கு விடை தேடியபோது கிடைத்த கதைதான் தொண்டன்.
அப்படி ஒரு சம்பவம் படத்தில் நடக்கிறது. அதனை என் தங்கை தட்டி கேட்கிறாள். தடுத்து நிறுத்துகிறாள். அதனால் அவளுக்கு என்ன நேர்கிறது. அதை ஆம்புலன்ஸ் டிரைவரான நான் எப்படி சந்திக்கிறேன் என்பது ஒரு கதை. ஆம்புலன்ஸ் அட்டெண்டரான விக்ராந்த் ஒருவரை காப்பாற்றுகிறார். காப்பாற்றப்பட்டவருக்கு உள்ள பகையாளிகள் விக்ராந்துக்கும் பகையாளி ஆகிறார்கள். ஒரு உயிரை காப்பாற்றியதற்காக என் தங்கையும் துரத்தப்படுகிறாள். விக்ராந்தும் துரத்தப்படுகிறார்.
துரத்துவது யார்? என்ன காரணம். நானும் விக்ராந்தும் அதனை எப்படி எதிர் கொள்கிறோம் என்பதுதான் கதை. இது மக்களுக்கு அறிவுரை சொல்லும் படம் அல்ல. நாட்டு நடப்பை மக்களுக்கு சொல்லி இதில் உங்கள் பங்கு என்ன? என்று கேட்கிற கதை. மே மாதம் வெளிவருகிறது. என்கிறார் சமுத்திரக்கனி.