ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எவர்கிரீன் ஹிட் படம் பாட்ஷா. தொலைக்காட்சியில் அதிகமுறை ஒளிபரப்பான படம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முதல் பாகத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா முயற்சித்தார். இது தொடர்பாக அவர் ரஜினியிடம் பேசினார். ஆனால் ரஜினி "பாட்ஷா என்றால் ஒரே பாட்ஷா தான். இனி அப்படி ஒரு படத்தில் என்னாலும் நடிக்க முடியாது, உங்களாலும் இயக்க முடியாது. அந்த முயற்சி வேண்டாம்" என்று கூறிவிட்டார்.
இந்த நிலையில் பாட்ஷா படத்தை தயாரித்த சத்யா மூவீஸ் நிறுவனம் பாட்ஷா படத்தை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றி நவீன ஒலி அமைப்புடன் வெளியிட்டது. அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையொட்டி தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் சமீபத்தில் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பாட்ஷாவின் டிஜிட்டல் வடிவத்துக்கு ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளார். அதோடு மூன்றுமுகம் படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி மீண்டும் வெளியிடுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு ஆர்.எம்.வீரப்பன் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
"இப்போது சத்யா மூவீஸ் ஏன் படம் எடுக்கவில்லை?" என்று கேட்டிருக்கிறார். "நாங்கள் இனி படம் எடுத்தால் பாட்ஷா இரண்டாம் பாகம்தான் எடுப்போம்" என்று கூறியிருக்கிறார். இதற்கு சட்டென்று பதில் சொல்லாமல் மவுனமாக இருந்த ரஜினி... "சரி கதை கேளுங்கள் நன்றாக அமைந்தால் சேர்ந்து பண்ணலாம்" என்று கூறியுள்ளார்.
"பாட்ஷா இரண்டாம் பாகத்திற்கு கதை கேட்டு வருகிறோம். பாட்ஷாவை விட பவர்புல் கதையாக இருக்க வேண்டும். நல்ல கதை அமைந்தால் அதை ரஜினி சாரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்" என்று கூறியுள்ளார் ஆர்.எம்.வீரப்பனின் மகன் தங்கராஜ்.