ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரசன்னா. ஒருகட்டத்தில் நாயகனாக நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால் மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் வில்லனாக உருவெடுத்தார். அதையடுத்து மீண்டும் ஹீரோவாக நடித்து வந்த பிரசன்னாவின் மார்க்கெட் சரிவடைந்ததை அடுத்து தற்போது கேரக்டர் நடிகராக ரூட்டை மாற்றிக்கொண்டுள்ளார். அந்த வகையில், துப்பறிவாளன் உள்ளிட்ட சில படங்களில் வித்தியாசமான கேரக்டர் களில் நடித்து வரும் பிரசன்னா, சுசிகணேசன் இயக்கி வரும் திருட்டுப்
பயலே-2 வில் மீண்டும் நெகடீவ் ரோலில் நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல் பதிப்பில் நாயகனாக நடித்த ஜீவன், மாளவிகாவை பிளாக்மெயில் பண்ணி பணம் சம்பாதிக்கும் வேடத்தில் நடித்தார். ஆனால் இரண்டாவது பாகத்தில் நடிக்கும் பாபிசிம்ஹாவுக்கு பாசிட்டீவான வேடம்தானாம். பிர சன்னாதான் வில்லனாக நடிக்கிறார். குறிப்பாக, பேஸ்புக்கில் சாட்டிங் செய்து அதன்மூலம் 3 குடும்ப பெண்களை சீட்டிங் பண்ணும் வேடத்தில் நடிக்கிறார். அந்த 3 பெண்களில் ஒருவர்தான் அமலாபால். அந்தவகையில், அஞ்சாதேவை விடவும் இந்த திருட்டுப்பயலே-2 படம் பிரசன்னாவை அதிரடியான வில்லனாக வெளிப்படுத்தும் என்கிறார்கள்.