ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
24 படத்திற்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது மிகவும் ஊக்கம் அளிப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, மூன்று வேடங்களில் டைம் மிஷனை மையமாக வைத்து வௌிவந்த சயின்ஸ் பிக்சன் படம் '24'. இப்படத்திற்கு சிறந்த ஔிப்பதிவு மற்றும் தயாரிப்பு நிர்வாகம் என இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இதற்கு சூர்யா மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது... ''தேசிய விருது வென்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். ஒட்டுமொத்த 24 குழுவினரும் தேசிய விருது அறிவிப்பு குறித்து மகிழ்ச்சியில் இருக்கிறோம். ஒளிப்பதிவாளர் திரு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர்களான அமித் மறும் சுப்ரோ ஆகியோரின் பணிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. தேசிய விருது குழுவினர் அனைவருக்கும் எங்களுடைய படக்குழுவினரின் சார்பாக நன்றி.
ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது போல 24 எங்களுக்கு ஒரு முக்கியமான படம். அதை முடிப்பதில் எங்களுக்கு நிறைய சவால்கள் இருந்தது. அவர்களுடைய முந்தைய படங்களுக்கும் சேர்த்து கிடைத்த ஒரு மரியாதையாக தான் பார்க்கிறோம்.
மனதுக்கு பிடித்த ஒரு படத்துக்கு தேசியளவில் அங்கீகாரம் கிடைக்கும் போது மிகவும் ஊக்குவிப்பாக இருக்கிறது. இது போன்ற மனது நெருக்கமான படங்களுக்கு செய்வதற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது. அனைவருடைய அன்புக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.