ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஜோக்கர் படத்திற்கு விருது கிடைத்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கான ஒரு அங்கீகாரம் தான் என இயக்குநர் ராஜூ முருகன் கூறியுள்ளார். பத்திரிகையாளராக இருந்த ராஜூ முருகன் குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே வித்தியாசமான கதை களத்துடன் களமிறங்கிய ராஜூ முருகன், இரண்டாவதாக ‛ஜோக்கர்' என்ற படத்தை இயக்கினார். குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்தார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை பற்றி பேசிய இப்படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல இப்படத்தில் பாடிய சுந்தருக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.
தேசிய விருது கிடைத்தது குறித்து பத்திரிகையாளர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் இயக்குநர் ராஜூ முருகன் உள்ளிட்ட ஜோக்கர் படக்குழுவினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜூ முருகன்... ‛‛மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுவாக நான் விருதுகளை குறி வைத்து கதை எழுதுவது கிடையாது. ஜோக்கர் மாதிரி கதையை எழுதும்போது அதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே பெரிய விருது என்று தான் எண்ணினேன். அதை எனது தயாரிப்பாளர்கள் பிரகாஷ் மற்றும் பிரபு சரியாக செய்தார்கள், அவர்களுக்கு என் முதல் நன்றி.
ஜோக்கருக்கு கிடைத்த விருதை கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகத்தான் பார்க்கிறேன். இதன்மூலம் இதுபோன்ற படங்கள் அதிகளவில் வெளிவர உதவும். மனித உரிமைகள் போராளிகள் பற்றிய படம் தான் ஜோக்கர் என்று நினைக்கிறேன். இந்த விருது அவர்களுக்கான ஒரு மரியாதையை கொடுக்கும் என்று நம்புகிறேன்.
இப்படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும், குறிப்பாக ஹீரோ குரு சோமசுந்தரம், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாட்டு பாடிய சுந்தர் மற்றும் உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றி''.
இவ்வாறு ராஜூ முருகன் கூறியுள்ளார்.