ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமா துறையில் நடிகர், நடிகை, இயக்குநர், படம், இசை, ஒளிப்பதிவு... என பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் சண்டை கலைஞர்களுக்கு என்று இதுவரை எந்த விருதும் வழங்கப்படவில்லை. ஆக்ஷ்ன் காட்சிகளை மட்டுமே வைத்து வெற்றி பெற்ற படங்களும் இருக்கின்றன. அந்த வகையில் சண்டை கலைஞர்களுக்கும் விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் கூட ஐஸ்வர்யா தனுஷ், சண்டை கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதுமட்டுமல்ல அவர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றையும் எடுத்தார். இந்நிலையில், 63 ஆண்டுகால தேசிய விருது வரலாற்றில் முதன்முறையாக இந்தாண்டு சண்டை கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் சிறந்த சண்டை கலைஞருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சண்டைகாட்சிக்கான முதல் தேசிய விருதை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் பெறுகிறார். மலையாளத்தில் வெளியான புலி முருகன் படத்தில் சிறப்பாக சண்டைகாட்சி அமைத்ததற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆண்டுதோறும் சண்டை கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கப்படும்.