ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கஜோல். திருமணம், குழந்தை பிறப்பு என அடுத்தடுத்து குடும்ப பொறுப்புகள் வந்ததால் சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார். அதுவும் முதல் ரீ-என்ட்ரி படம் தமிழில். ஏற்கனவே தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்த கஜோல், இப்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வேலையில்லா பட்டதாரி-2வில் நடித்துள்ளார். அதுவும் நெகட்டீவ் ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்த கஜோல், மும்பையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
கஜோலிடம் தமிழ் படமான விஐபி-2வில் நடித்த அனுபவம் பற்றி கேட்டபோது, அதற்கு பதில் அளித்து கஜோல் கூறியதாவது.... "விஐபி-2 படத்தில் நடிப்பதற்கு முதலில் பயந்தேன். ஏனென்றால் எனது ரோலை இப்படத்தில் சிறப்பாக செய்வேனா என்ற தயக்கம் இருந்தது. இருந்தாலும் படக்குழுவினர் கொடுத்த நம்பிக்கை மற்றும் அவர்களது ஊக்கம் என்னை நம்பிக்கையுடன் நடிக்க வைத்தது. நடிகர் தனுஷ் மற்றும் செளந்தர்யா ரஜினிக்கு பாராட்டுகள். இப்படத்தில் இருந்து நிறைய விசயங்கள் கற்று கொண்டேன். தமிழ் படங்களில் நடிப்பது நன்றாக இருந்தது" என்றார்.
‛விஐபி-2' படத்தில் நடிகர் தனுஷ் உடன் கஜோல், அமலாபால், சமுத்திரகனி, சரண்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.