ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன். சமீபத்தில் லண்டனில் தனது மகள் அனுஹாசன் வீட்டில் இருந்தபோது காலமானார். சந்திரஹாசனுக்கு சென்னை காமராஜர் அரங்கத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், கமலை பற்றி மிகவும் கவலைப்பட்டார்.
ரஜினி பேசுகையில், கமலுக்கு மூன்று தந்தைகள். ஒருவர் அவரை பெற்ற சீனிவாசன், வளர்த்த சாருஹாசன், ஆளாக்கிய சந்திரஹாசன். இரண்டு முறை தான் சந்திரஹாசனை சந்தித்துள்ளேன். அவரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். பொருளாதார வளர்ச்சி கமல் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. அப்படியும் அவர் சேர்த்து வைத்திருந்தார் என்றால் அது சந்திரஹாசனால் தான். சந்திரஹாசன் இல்லாமல், கமல் இனி எப்படி சம்பாதிக்க போகிறார் என்று தெரியவில்லை, அதைப்பற்றி தான் நான் அதிகம் கவலைப்படுகிறேன். கமல் கடும் கோபக்காரர், அதனால் அவரிடம் ஜாக்கிரதையாக இருப்பேன் என்றார்.