ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் இரட்டை இயக்குனர்களாக 1940 முதல் 1990 வரை வலம் வந்தவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு. 1944ம் ஆண்டு பூம்பாவை படத்தின் மூலம் இயக்குனராக இவர்கள் அறிமுகமானார்கள். அதன்பிறகு பைத்தியக்காரன், ரத்னகுமார், நல்ல தம்பி, பராசக்தி, ரத்த கண்ணீர், புதையல், மாமியார் மெச்சிய மருமகள், திலகம், தெய்வபிறவி, உயர்ந்த மனிதன், எங்கள் தங்கம், பெற்றால்தான் பிள்ளையா, குழந்தையும் தெய்வமும், அன்னை, நல்லதம்பி உள்பட 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார்கள்.
தமிழ் சினிமாவில் கமர்ஷியலும், குடும்ப கதையும் கலந்து கொடுத்து வெற்றி பெற்ற இயக்குனர்கள். இவர்களை பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆவணப் படம் ஒன்றை இயக்கி உள்ளார். இவர்கள் இயக்கிய படங்களின் சிறப்பு, கிருஷ்ணன் பஞ்சுவுடன் வாழ்ந்தவர்கள், பழகியவர்கள் ஆகியோரின் பேட்டி, அவர்களது குடும்பத்தினரின் பேட்டி ஆகியவை இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இரட்டை இயக்குனர்களில் ஒருவரான பஞ்சுவின் மகன்கள் பஞ்சு பிருத்விராஜ், பஞ்சு சுபாஷ் சந்திரன், பஞ்சு அபிமன்யூ ஆகியோர் இதனை தயாரித்துள்ளனர்.
இந்த ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா நாளை மறுநாள் (6ந் தேதி) ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கிறது. நடிகர் சிவகுமார் வெளியிட சூர்யா பெற்றுக் கொள்கிறார். விழாவில் ஏவிஎம்.குமரன், இயக்குனர்கள் மகேந்திரன், லெனின். கே.பாக்யராஜ், வி.சி.குகநாதன், பி.வாசு, விக்ரமன், வசனகர்த்தா ஆரூர்தாஸ், நடிகைகள் எம்.என்.ராஜம், லட்சுமி, குட்டி பத்மினி, உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.