ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருமணத்துக்குப் பிறகு அருள்நிதி நடித்த படம் - 'ஆறாது சினம்'. அறிவழகன் இயக்கிய இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதனால் அப்ஸெட்டான அருள்நிதி, நடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு தனக்கு பிரேக் கொடுக்கும் அளவுக்கு பொருத்தமான கதைகளை தேர்வு செய்யும் திட்டத்தில் கதைகளை கேட்க ஆரம்பித்தார்.
அழகிய தீயே, மொழி, உப்புக்கருவாடு போன்ற படங்களை இயக்கிய ராதா மோகன் சொன்ன ஒரு கதை அருள்நிதிக்கு பிடித்துப்போனது. உடனடியாக அந்தப் படத்தை தொடங்க சொன்னார். 'பிருந்தாவனம்' என பெயரிடப்பட்ட அந்தப் படத்தில்தான் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டில் வெளியான ஷாருக்கானின் ஃபேன் பட ஸ்டைலில், ஒரு நடிகருக்கும் அவருடைய ரசிகர் ஒருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
'பிருந்தாவனம்' படத்தில் காது கேளாதவராக நடிக்கிறார் அருள்நிதி. 'பலே வெள்ளையத் தேவா' படத்தில் நடித்த தன்யா பாலகிருஷ்ணன் 'பிருந்தாவனம்' படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தை முடித்ததும், அறிமுக இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்ற படத்திலும் நடிக்கிறார் அருள்நிதி.