ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மைனா, கும்கி படங்களில் வெற்றி பெற்ற பிரபுசாலமன், அடுத்து இயக்கிய கயல், தொடரி படங்களில் தோல்வியை சந்தித்தார். குறிப்பாக அவர் கடைசியாக இயக்கிய தொடரி படம் வெற்றியைப் பெறாத நிலையில், அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன் வரவில்லை என்று சொல்லப்பட்டது. ஆனாலும் தயாரிப்பாளர் கிடைக்காவிட்டால் தானே தயாரிக்கும் திட்டத்தில் புதிய படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.
'கும்கி' படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கும் திட்டத்தில் அப்படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வருகிறார். இப்படத்திற்கு 'யானை' என்று பெயர் வைத்துள்ளதாகவும் தகவல். மற்றொன்று... புதிய கதையை இயக்குவது என தற்போது அவர் கைவசம் இரண்டு திட்டங்கள் உள்ளன.
இந்தப்படத்தில் நடிப்பதற்கு உதயநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் பிரபு சாலமன். முழுக்க முழுக்க பாலைவனத்தில் நடைபெறும் இந்தக்கதையைக் கேட்ட உதயநிதி கதாநாயகனாக நடிக்க சம்மதித்தது மட்டுமல்ல, அந்தப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் மூலமே தயாரிப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.
தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்த பிறகு பிரபுசாலமன் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், உதயநிதியுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதை பிரபு சாலமன் உறுதி செய்துள்ளார்.