மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நாளை(ஏப்.,2-ம் தேதி) நடைபெற இருக்கிறது. விஷால் தலைமையில் ஒரு அணியினரும், கேயார் தலைமையில் ஒரு அணியினரும், ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியினரும் களம் காண்கின்றனர். இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான விசு, தயாரிப்பாளர்கள் தேர்தல் தொடர்பாக ஒரு கோபமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதன் விபரம் வருமாறு...
வரலாறுகளை சர்வசாதாரணமாக படைத்த பல சிறுபட தயாரிப்பாளர்கள் இன்று முடங்க வேண்டிய அவசியம் என்ன?, முடங்கலாமா? அல்லது முடக்கப்படலாமா?. அதற்கு ஏன் பெயர் பலகையில் மட்டும் ஒரு தயாரிப்பாளர்கள் சங்கம்?, இருக்கையை தேய்த்து கிழித்தவர்கள் இனி சங்கத்திற்கு எதற்கு தெண்டமாக..? தனது சுய லாபத்தை மட்டுமே யோசிப்பவர்கள் அவர்களது அலுவலகத்தில் ஹாயாக யோசிக்கட்டுமே?
பெரிய பெரிய பெயர்களில் சின்ன புத்திக்காரர்களை தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுவிற்குள் நுழைக்க பார்க்கிறார்கள், அவர்களை வெளியே தடுத்து நிறுத்துங்கள். சில பெயர்களை ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டே இருக்கிறோமே, அவர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டாமா?. இப்போதைய அவசர தேவை சரியான நபர்கள் தான். நான் உங்கள் சங்கத்தின் அங்கம் இல்லை, ஆனால் உங்கள் சங்க அங்கத்தினர்கள் மூலமாக தின்ற சோறு தான் இன்றும் என்னையும், என் குடும்பத்தையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு விசு கூறியுள்ளார்.