ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று(மார்ச் 31-ம் தேதி) சிறப்பாக நடந்தது. தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட சங்கங்கள் உள்ளன, இதில் முக்கியமானது தென்னிந்திய நடிகர் சங்கம். இந்த சங்கத்திற்கு என்று தனியாக கட்டடம் எதுவும் இல்லை. நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான அணியினர் நிர்வாகத்தின் பொறுப்புக்கு வந்து நடிகர் சங்கம் கட்டடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டனர்.
அடிக்கல்: அதன்படி, தி.நகர், ஹபிபுல்லா சாலையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக 19 கிரவுண்ட் நிலம் முதலில் மீட்கப்பட்டது. பின்னர் அங்கு கட்டடம் கட்ட உரிய அனுமதியும் பெறப்பட்டது. இதையடுத்து இன்று நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக பூமி பூஜை நடந்தது. நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணி முதல் பூஜைகள் ஆரம்பமாகி தொடந்து நடைபெற்றது. நடிகர் சங்க கட்டடத்திற்கான முதல் கல்லை விஷால் மற்றும் நாசர் ஆகியோர் எடுத்து வைத்தனர். தொடர்ந்து நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் விழாவில் பங்கேற்ற பிற நடிகர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் ஆகியோரும் எடுத்து வைத்து வைத்தனர்.
ரஜினி, கமல் சேர்ந்து அடிக்கல்: ரஜினி, கமல் இருவரும் தான் சங்கத்திற்கான பூமி பூஜையில் முதல் கல்லை எடுத்து வைப்பார்கள் என்று நடிகர் சங்கம் கூறியிருந்தது. ஆனால் கமல் லண்டன் சென்று திரும்பியதாலும், ரஜினியை மலேசிய பிரதமர் சந்தித்தாலும் தாமதமாக பங்கேற்றனர். சுமார் 12 மணியளவில் கமல், ரஜினி இருவரும் கட்டடத்திற்கான செங்கல்லை எடுத்து வைத்தனர்.
குவிந்த திரைபிரபலங்கள் : இந்த விழாவில் நாசர், விஷால், பொன்வண்ணன், S.P.முத்துராமன், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி, வரலட்சுமி, சுரேஷ், கமிலா நாசர், சிவகார்த்திகேயன், சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ், விஜயகுமார், கதிர், ஒய்.ஜி.மகேந்திரன், சிவகுமார், தயாரிப்பாளர் ஜிகே.ரெட்டி, கார்த்திக், கெளதம் கார்த்திக், பூர்ணிமா, பாக்யராஜ், சாந்தனு, சரோஜாதேவி, ஹரி, பிரீத்தா ஹரி, பரத், மீனா, பிரமிட் நடராஜன், விச்சு, சுந்தர்.சி, சச்சு, மோகன், கானா உலகநாதன், ஜீவன், லொள்ளு சபா ஜீவா, சாமிநாதன், சாம்ஸ், ரமாகிருஷ்ணன், மயில்சாமி, கலையரசன், போண்டா மணி, தன்ஷிகா, மகேந்திரன், வெண்ணிறாடை நிர்மலா, பவன், செந்தில், ஜெயமாலினி, யோகிபாபு, மன்சூர் அலிகான், லிஸி, காயத்ரி ரகுராம், ஆர்யன், அழகு, எம்எஸ்.பாஸ்கர், பார்த்திபன், எம்என்.ராஜம், தயாரிப்பாளர் ராஜுமகாலிங்கம், எஸ்ஆர்.பிரகாஷ், பாபு, S.R.பிரபு, K.E.ஞானவேல், அபினேஷ், விஜய் அன்டனி, சரத் பாபு, அதவ் கண்ணதாசன், ராஜ்கிரண், ஆனத்ராஜ், பிந்துமாதவி, உமா ரியாஸ், ஜனகராஜ், ஜீவா, ஹரிஷ், லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், தயாரிப்பாளர் A.L.அழகப்பன், மனோஜ் பாரதிராஜா, பாலா சரவணன், மிஸ்கின், சோனா, கேஎஸ்.ரவிக்குமார், ஜெய சித்ரா, அசோக், ஹரி குமார், ஆர்கே.செல்வமணி, சஞ்சீவ், சாக்க்ஷி அகர்வால், துளசி, நந்திதா, காஞ்சனா, R.K.சுரேஷ், தேவயானி, ராஜா குமாரன், சோபி மாஸ்டர், எடிட்டர் மோகன், பி.வாசு, சக்தி வாசு, ரோகினி, சஞ்சனா சிங், ஜகுவார் தங்கம், சிம்ரன், ஆர்த்தி, தம்பி ராமையா, கதிர், ஆடுகளம் நரேன், ஷிரிஷ் மெட்ரோ, அம்பிகா, நடராஜன், முனிஷ்காந்த், கிருஷ்ணா, ரேவதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பழம்பெரும் நடிகைகளான சரோஜா தேவி, வாணிஸ்ரீ, சாரதா, சச்சு, வையெந்தி மாலா, ஷீலா, லதா, உள்ளிட்டவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
முன்னணி நடிகர்கள் புறக்கணிப்பு : இந்த விழாவில் அனைத்து நடிகர்களும் கலந்து கொள்ள வேண்டும், கலந்து கொள்ளும் அனைவரும் கட்டடத்திற்கான ஒரு செங்கலை எடுத்து வைக்க வேண்டும் என்று நாசர், விஷால் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், விஜய், அஜித், கார்த்தி, தனுஷ், ஆர்யா, விஜய்சேதுபதி, ஹன்சிகா, நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் பங்கேற்கவில்லை.
புதிய கட்டடத்தில் என்னென்ன அம்சங்கள்: நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம், சுமார் 26 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த கட்டடம் 4 மாடி கொண்டதாகும். இதில் ஆயிரம் பேர் அமரும் அரங்கம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன கூடம், எடிட்டிங், டப்பிங், மியூசிக் தியேட்டர்கள் மற்றும் அலுவலகங்கள் கட்டப்பட உள்ளது.